Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தஞ்சாவூர்: கும்பகோணத்தில் நம்மாழ்வார் நற்பணி மன்றம் மற்றும் நகராட்சி தன்னார்வு தொண்டு நிறுவனம் இணைந்து நகராட்சி மகாமக கலையரங்கம் திருமண மண்டபத்தில் 200க்கும் மேற்பட்ட மரங்கள் நகராட்சி அலுவலகம் மட்டும் நகராட்சிக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
இந்த விழாவை நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஜெகதீசன் மகாமகம் கலையரங்கில் வேப்பமரம் புங்கமரம் வில்வமரம் உள்ளிட்ட பல்வேறு மரங்களை நட்டு வைத்து தண்ணீர் ஊற்றி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முன்னாள் கண்காணிப்பாளர் சாம்பசிவம் சுகாதாரத்துறை அலுவலர் பிரேமா பொறியாளர் விஸ்வேஸ்வரன் மற்றும் நகராட்சி அலுவலர்கள் தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகள் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.